இந்நிலையில், வெள்ள நிவாரணம் வழங்கப்பட உள்ள பகுதிகள் குறித்த அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட 4 மாவட்ட ஆட்சியர்கள் பரிந்துரைப்படி இந்த நிவாரணம் பின்வருமாறு வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டம்: அனைத்து வட்டங்களுக்கும்.
செங்கல்பட்டு மாவட்டம்: தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்கள் முழுமையாக மற்றும் திருப்போரூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம்: குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள்.
திருவள்ளூர் மாவட்டம்: பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய ஆறு வட்டங்கள்.
Enewz Tamil WhatsApp Channel
உலக கோப்பை தோல்வி குறித்து இந்தியாவின் ஹிட் மேன்…, உருக்க பதிவு வைரல்!!