தமிழகத்தில், வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், மதுரையில் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும், மீறுபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு அறிவிப்பு:
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக, கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. அதுவும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில், தினசரி பாதிப்பு 400க்கு மேல் பதிவாகி வருகிறது.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அரசு முடிவு செய்தது. இதன் ஒரு கட்டமாக மதுரை மாவட்டத்தில், அதிகரித்து வரும் தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவித்துள்ளார்.
இதனை மீறுபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வரும் என்றும், இதனை கண்காணிக்க மாவட்ட முழுவதும் சிறப்பு குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்