தமிழகத்தில் டீசல் விலை உயர்வால் கஷ்டப்பட்டு வரும் லாரி உரிமையாளர்களுக்கு, சுங்க கட்டணம் உயர்வு அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஆன்லைன் அபராதத்தோடு காலாண்டு சாலை வரி 6 சக்கர லாரிகளுக்கு ரூ.950 ஆகவும், 10 சக்கர லாரிகளுக்கு ரூ.2,100 ஆகவும், 12 சக்கர லாரிகளுக்கு ரூ.2,800 ஆகவும், 16 சக்கர லாரிகளுக்கு ரூ.4,500 ஆகவும் 40 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் லாரி உரிமையாளர்கள் சங்கம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வருகிற நவம்பர் 6ஆம் தேதி முதல் லாரிகள் இயங்காது என அறிவித்துள்ளனர். இதில் ஆன்லைன் அபராதம், 40 சதவீத வரி உயர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.