தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மீண்டும் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து, முதல்வர் ஸ்டாலின் அரசு அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
முதல்வர் ஆலோசனை:
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக, கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொரோனாவின் உருமாறிய B5 வைரஸ் பரவல் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து தமிழகத்தின், அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் மீண்டும் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதுவும் குறிப்பாக, முக கவசம் அணியாதவர்களிடம் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியாளர் அறிவித்தார்.
இந்த நிலையில், தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் குறித்து முதல்வர் ஸ்டாலின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார். வைரஸ் பரவலின் தன்மையை பொறுத்து தமிழகத்தில், கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்