தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் மூலம் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. 2023 செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்பட்டு வரும் இதுவரை இரண்டு தவணைகள் வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் வங்கி கணக்கு இல்லாத மகளிருக்கு கூட்டுறவு வங்கிகள் மூலமாகவும் உரிமை தொகை வழங்கப்படுகிறது.
Enewz Tamil WhatsApp Channel
அந்த வகையில் சென்னையில் தலைமை கூட்டுறவு வங்கியில். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள வங்கி கணக்கு இல்லாத தகுதியான மகளிர்களுக்கு உரிமை தொகை அளிக்கப்படுகிறது. அதன்படி தலைமை மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளில் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய் என மொத்தமாக மாதந்தோறும் 8 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.