தமிழக அரசு துறையில் காலியாக உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியிடங்களை, மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது. இந்த வகையில், கிராம சுகாதார மையங்களில் 2250 செவிலியர்களை நியமனம் செய்வது குறித்த முக்கிய அப்டேட்களை இந்த தேர்வு வாரியம் சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், செவிலியர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு, கிராம சுகாதார செவிலியர் நியமனத்தில் ஊக்க மதிப்பெண் வழங்கப்படும் என முன்னேரே தமிழக அரசு அறிவித்திருந்தது.
Enewz Tamil WhatsApp Channel
இதன்படி, அனைத்து வகையான அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா கேர் மையங்களில் 6 முதல் 12 மாதங்கள் வரை பணியாற்றியவர்களுக்கு 2 மதிப்பெண்களும், 12 முதல் 18 மாதங்கள் வரை பணியாற்றியவர்களுக்கு 3 மதிப்பெண் வழங்க உத்தரவு விடப்பட்டுள்ளது. மேலும், 18 முதல் 24 மாதங்கள் வரை பணியாற்றியவர்களுக்கு 4 மதிப்பெண், 24 மாதங்களுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு 5 மதிப்பெண்களும் வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.