தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சூப்பரான உத்தரவு:
தீபாவளி பண்டிகை, வரும் அக்டோபர் 24ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசுக்கு சொந்தமான அரசு போக்குவரத்து கழகங்கள், ஆவின், டாஸ்மாக், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், மின்சார வாரியம் போன்ற பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்படும்.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
இதன் அடிப்படையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C ‘ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்களுக்கு 10% போனஸ் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதாவது, 8.33% போனஸ் மற்றும் 1.67% கருணைத் தொகை உள்பட 10 % போனஸ் வழங்குவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்.,, அதிரடி உத்தரவை பிறப்பித்த நிறுவனம்!!
இந்த நிலையில், தற்போது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின் கீழ், தமிழக கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 10% போனஸ் தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு கூட்டுறவுத்துறை ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.