தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், அண்டை நாடுகளில் வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் மீண்டும் பொது முடக்கம் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் முழு ஊரடங்கு:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் மிகத்தீவிரமாக பரவிய மூன்றாம் அலை பரவல், அரசின் தீவிரமான கட்டுப்பாடுகளால் தற்போது கட்டுக்குள் வந்திருக்கிறது. இதனால், தமிழகத்தில் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்த நிலையில், அண்டை நாடுகளான சீனா, நெதர்லாந்து, நார்வே மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால், இந்தியாவில் மீண்டும் வைரஸ் பரவல் அதிகமாகுமோ? என்ற அச்சம் எழுந்தது.
இதன் காரணமாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அண்மையில், கொரோனா தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில், தொற்று பரவல் குறைந்தாலும் பொதுமக்கள் கட்டாயம் ஒரு கவசம் அணிய வேண்டும் என்றும், அரசு வெளியிட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் முதல்வர் அறிவுறுத்தினார். இந்த நிலையில் தொற்று பரவல் மீண்டும், அதிகரிக்கும் பட்சத்தில், தமிழகத்தில் முழு ஊரடங்கு விதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால், அதற்கான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
லேட்டஸ்ட் தகவல்களை உடனுக்குடன் பெற – கிளிக் செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்