வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (நவம்பர் 30) வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நேற்று (நவ.29) இரவு முதல் பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் கனமழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. இந்த மழைப் பொழிவுக்கு இன்றளவும் வாய்ப்புள்ளதால் ஒரு சில மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதன்படி சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (நவம்பர் 30) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமல்லாமல் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்துள்ளனர்.