தமிழகத்தில் கொரோனா 4ம் அலை?? அடுத்த இரண்டு மாதங்கள் மிகவும் கவனம்! மக்களுக்கு எச்சரிக்கை!!

0
தமிழகத்தில் கொரோனா 4ம் அலை?? அடுத்த இரண்டு மாதங்கள் மிகவும் கவனம்! மக்களுக்கு எச்சரிக்கை!!
தமிழகத்தில் கொரோனா 4ம் அலை?? அடுத்த இரண்டு மாதங்கள் மிகவும் கவனம்! மக்களுக்கு எச்சரிக்கை!!

பல நாடுகளில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் அடுத்த 2 மாதங்கள் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என கான்பூர் ஐஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

மிகவும் கவனம்:

இந்தியாவை பொறுத்தவரை கடந்த சில தினங்களாக வைரஸ் பாதிப்பு மிகவும் குறைந்துள்ளது. இதனால், கொரோனா குறித்த அனைத்துக் கட்டுப்பாடுகளும் வருகிற மார்ச் 31ம் தேதியுடன் முடித்து கொள்ளப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் அறிவித்திருந்தது. இதையடுத்து, இந்தியாவில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பின் இயல்பு நிலை திரும்பி வருகிறது. ஆனால், சீனா, நெதர்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளில் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அங்கு மீண்டும் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வைரஸ் பரவல் இந்தியாவில் குறைந்து வந்தாலும் பொதுமக்கள் அடுத்த 2 மாதங்களுக்கு மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கான்பூர் ஐஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுபோல, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இது குறித்து முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது, தமிழகத்தில் கொரோனா 4ம் அலை வராது என்றும், அப்படியே வந்தாலும் அதை கட்டுப்படுத்த, மருத்துக்கட்டமைப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என நம்பிக்கை அளித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here