ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – 31ம் தேதிக்குள் இதை பண்ணலனா ரூ. 10,000 அபராதம்!!

0

பான் கார்டுடன், ஆதார் எண்ணை வரும் 31ம் தேதிக்குள், இணைக்காவிட்டால் பெரும் தொகை அபராதமாக, விதிக்க வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசு  எச்சரிக்கை:

இந்தியாவில் உள்ள குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும், தனி நபர் அடையாளமாக ஆதார் அட்டை உள்ளது. இந்த ஆதார் எண்ணை, பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டது. இதற்கான காலக்கெடு ஏற்கனவே, நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 31ம் தேதிக்குள் அவற்றை இணைக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இந்த காலக்கெடு முடிவடைய இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அவற்றை செய்து முடிக்காதவர்களின் பான் கார்டு முடக்கப்படும் என்று, இதை இணைக்க தவறியவர்களுக்கு அபராதமாக 1,000 முதல் 10,000 ரூபாய் விதிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போக, பான் கார்டு ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான வழிகளையும் அரசு வெளியிட்டுள்ளது.

  • முதலில் வருமானவரித் துறையின் https://www.incometaxindiaefiling.gov.in/home என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்ல வேண்டும்.
  • இதை செய்யும் போது, உங்கள் கையில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதை மறவாதீர்கள்.
  • நீங்கள் எளிய முறையில் SMS மூலமாகவே ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைத்துவிடலாம்.
  • பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு UIDPAN <12 இலக்க ஆதார் எண்> <10 இலக்க PAN எண்> என டைப் செய்து குறுந்தகவல்( SMS ) அனுப்ப வேண்டும்.

இதனை செய்து முடித்தால் எளிதில் உங்கள் பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விடும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here