இன்று ஒரே நாளில் சுமார் 470 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கடந்த ஒரு சில வாரங்களாக தொடர்ச்சியாக அதிகரித்து வந்த கொரோனா பரவல் பாதிப்புகள் இன்று (ஏப்ரல் 25) நிலவரப்படி சற்று குறைந்துள்ளது. இதுவரைக்கும் தினசரி 500 ஐ கடந்து பதிவு செய்யப்பட்டு வந்த கொரோனா பாதிப்புகள் நேற்று 491 என பதிவானது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 470 புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
இந்த நடிகர்களுடன் இனி வேலை செய்யப் போவதில்லை…..,திரைப்படத் துறை முடிவு….,
மேலும், மாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் 525 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில், 3,585 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மற்றபடி, இந்தியாவில் இன்று புதிதாக பதிவு செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை சில ஆயிரங்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.