தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கி வருகிறது. இதில் குறிப்பாக, வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (நவம்பர் 30) வலுப்பெற்று உள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு முதலே கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
இதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை, “காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கும் பாதுகாப்பு கருதி விடுமுறை அளிக்க வேண்டும். அவர்கள் மட்டும் என்ன கப்பலில் கல்லூரிக்கு செல்வார்களா??” என கேள்வி எழுப்பி உள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
அர்ச்சனாவை கயிற்றால் கட்டிய போட்டியாளர்கள்.., விஷ்ணுவிடம் சீறி பாய்ந்த காட்சி – நடக்க போறது என்ன?