மிக்ஜம் புயல் எதிரொலி., பலப்படுத்தப்படும் பாதுகாப்பு., அவசர கட்டுப்பாட்டு மைய எண்கள் அறிவிப்பு!!!

0
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் 3ஆம் தேதி வலுப்பெற்று 4-ஆம் தேதி தமிழகத்தை நோக்கி மிக்ஜம் புயலாக வரக்கூடும் என்பதால் தமிழக கடலோர மாவட்டங்களில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்போது செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மைய எண்களை அறிவித்துள்ளது.
அதன்படி செங்கல்பட்டு மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறைக்கு 044-27427412, 27427414 எண்ணும், கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1077 என்ற எண்ணுக்கும் 944427234 என்ற வாட்ஸ்அப்  எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு  044-27664177, 27666746, 9444317862 எண்ணும், கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1077 என்ற எண்ணுக்கும் 9444317862 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here