தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு, அ.தி.மு.க. கட்சி தலைவர்கள் எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம், யுடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியாக பிரிந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. எழுச்சி பெறுமா? என பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் குழப்பத்துடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
Enewz Tamil WhatsApp Channel
அதற்கு பதிலளித்த சசிகலா, “அ.தி.மு.க.வில் இதுபோன்ற சம்பவம் ஏற்கனவே அரங்கேறி உள்ளது. அப்போது அனைவரையும் நான்தான் ஒன்றிணைத்தேன். தற்போது அனுபவமும் உள்ளதால், அனைவரையும் ஒன்றிணைக்கும் அளவிற்கு எனக்கு கெப்பாசிட்டி இருக்கு. விரைவில் சரி செய்வேன். ஓபிஎஸ் என்னிடம் அனுமதி பெற்று வருவதற்கு மாற்று கட்சியை சார்ந்தவர் இல்லை. அவர் எப்போது வேண்டுமானாலும் என்னை சாதிக்கலாம். அனைவரையும் ஒன்றிணைத்து நாடாளுமன்ற தேர்தலில் எந்த கூட்டணிக்கு ஆதரவு என்பதை விரைவில் தெரிவிப்பேன்” என தெரிவித்துள்ளார்.
இனி இந்த சுங்கச்சாவடியில் கட்டணம் கிடையாது., பொதுமக்களுக்காக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்!!