தமிழகத்தில், சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கொரோனா மிகவும் வேகம் எடுத்துள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சுகாதாரத் துறை எச்சரிக்கை :
தமிழகத்தில் சமீப தினங்களாக, கொரோனா பரவல் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதுவும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கோவை ஆகிய 5 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் பதிவாகி வருகிறது. இதையடுத்து, பொதுமக்கள் முக கவசம் அணிவது கட்டாயம் என்றும், தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம் என்றும் அரசு அறிவித்து வருகிறது.
இதுபோக, பிஏ 4, பிஏ 5 வகை உருமாறிய கொரோனா தொற்று புதிதாக பதிவாகி வருவதால், மாநிலத்தில் 5ம் அலை தொடங்கியதோ? என்ற புது அச்சம் எழுந்துள்ளது. இதையடுத்து, பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும், மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்