உலகமெங்கும் புகழ்பெற்ற திருநெல்வேலி இருட்டுக்கடை ஹல்வா கடையின் உரிமையாளரான ஹரிசிங் இன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா உறுதி:
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் வாழ்க்கை அவ்வளவு தான் என்பதை கொரோனா வைரஸ் உணர்த்தி உள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் திருநெல்வேலி இருட்டுக்கடை ஹல்வா கடை உரிமையாளர் ஹரிசிங் அவர்களுக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டது. இதனால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
![Halwa Shop](https://enewz.in/wp-content/uploads/2020/06/iruttu-kadai-300x235.jpg)
பாத்திமா ரெஹானா மீது போலீசார் வழக்குப்பதிவு – அரை நிர்வாண வீடியோ வைரல்..!
இந்நிலையில் அவர் இன்று தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வயதானவர்களுக்கு கொரோனா தாக்கம் ஏற்பட்டால் பிழைப்பது கடினம் என டாக்டர்கள் கூறி வரும் நிலையில் ஹரிசிங் அவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.