நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு முடிவடைய உள்ள நிலையில் அனைத்து மாநிலங்களும் அடுத்த ஆண்டுக்கான விடுமுறை பட்டியலை அறிவித்து வருகிறது. அந்த வகையில் இப்போது தெலுங்கானா மாநில அரசு அடுத்த ஆண்டுக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி அம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு மாநில அரசின் கீழ் உள்ள அனைத்து அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மற்றும் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை வழங்கப்படும் என பொது நிர்வாக துறை வெளியிட்டுள்ளது.