ஊரடங்கு மேலும் 10 நாட்களுக்கு நீட்டிப்பு…தளர்வுகளை அறிவித்து மாநில அரசு உத்தரவு!!!

0

கொரோனா நோய் தொற்று காரணமாக அதனை கட்டுப்படுத்தும் நோக்கில்  மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களின்  சூழலுக்கு  ஏற்ப ஊரடங்கு மற்றும் அதில் சில தளர்வுகளையும் அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் மேலும் 10 நாட்களுக்கு ஊரடங்கை நீடித்து அந்த மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும் அதில் சில தளர்வுகளையும் அறிவித்து உத்தரவிட்டுள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களில் தொற்று பரவல் அதிகமாக இருந்த நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தொற்றின் வீரியம் குறையவே மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களுக்கு ஏற்ப தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை பிறப்பித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் தமிழகமும் வருகிற 14ம் தேதி வரை ஊரடங்கை நீடித்து சில தளர்வுகளையும் அறிவித்தது.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தின் ஊரடங்கு நாளையுடன் முடிவடைய  உள்ளதால் அம்மாநில அரசு மேலும் 10 நாட்கள் அதாவது ஜூன் 19-ம் தேதி வரை நீடித்து சில தளர்வுகளுடன் உத்தரவை வெளியிட்டு உள்ளது. அதாவது, ஊரடங்கில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கம்மம், நல்கொண்டா, நாகர்ஜுனா சாகர் உள்ளிட்ட மாநில எல்லைப் பகுதிகளில் மட்டும் மதியம் 2 மணி வரை தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here