கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து உள்ள நிலையில் CBSE தேர்வு ரத்து செய்த நிலையில் தற்போது CTET தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக CBSE அறிவித்துள்ளது.
CBSE தேர்வுகள்..!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சிபிஎஸ்சி 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான தேர்வுகள் ஜூலை 1 முதல் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட இருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த பொழுது மாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
CTET தேர்வு ஒத்திவைப்பு..!
இந்நிலையில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு CTET ஒத்திவைக்கப்படுவதாக CBSE அறிவித்துள்ளது. ஜூலை 5ம் தேதி நடைபெறவிருந்த CTET தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.