நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜாதி, மதம் உள்ளிட்ட விவரங்கள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் பொது இடங்கள், பள்ளிகள் போன்ற இடங்களில் ஜாதி, மதம் குறித்த உரையாடல் இருக்கக்கூடாது என மத்திய மாநில அரசுகள் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்த நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் சில தனியார் பள்ளிகள் தங்களது மாணவர்களுக்கு வழங்கும் நோட்புக்கில் ஜாதி, மதம் உள்ளிட்ட விபரங்களை பூர்த்தி செய்யும் நடைமுறை செயல்பட்டு வருகிறது. இது தொடர்பான புகாரை, முதன்மை கல்வி அலுவலரிடம் திராவிட விடுதலைக் கழகத்தின் மாவட்ட தலைவர் நேரு தாஸ் சமர்ப்பித்துள்ளார்.
தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையம் பகீர்!!!
இதையடுத்து மாணவர்களிடம் ஜாதி, மதம் குறித்த விவரங்களை கேட்கவோ, குறிப்பேடுகளில் பூர்த்தி செய்ய சொல்வதோ கூடாது என தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.