தமிழக பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களே கவனம்., காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

0
தமிழக பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களே கவனம்., காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!
இன்றைய காலகட்டத்தில் போதைப்பொருள் பழக்கத்திற்கு பள்ளி மாணவர்கள் முதற்கொண்டு பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே இயங்கும் பெட்டிக்கடை, தேநீர் கடை என அனைத்து விதமான கடைகளிலும், சாக்லேட் போன்ற பொருட்கள் மாணவர்களுக்கு விற்கப்படுகிறதா? என்பதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.
அப்படி இதுவரை அறியாத நிறுவன பெயரில் சாக்லேட், பிஸ்கட் போன்றவை விற்பனை செய்யப்பட்டாலோ அல்லது சந்தேகப்படும்படியாக இருந்தாலோ, அது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்களிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here