முகக்கவசம் போடலையா.. இனி அபராதம் 200 இல்ல 500 – தமிழக அரசு அறிவிப்பு!!

0

தமிழகத்தில் முகக்கவசம் அணியாத மக்களிடம் இனி அபராத தொகையாக 500 ரூபாய் வசூலிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அபராதம் 500 :

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று மிகவும் அதிகரித்து வருகிறது. நாட்டில் வைரஸின் மூன்றாம் அலை பாதிப்பு தொடங்கிவிட்டதாக, அண்மையில் சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்தார். தொற்று பரவலை கட்டுப்படுத்த, மாநிலத்தில் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் முக கவசம் அணியாமல் வெளியே வர அனுமதி இல்லை என அரசு அண்மையில் தெரிவித்தது.

ஏற்கனவே, பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் நடைமுறை அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில், அந்த அபராதத் தொகை 200 லிருந்து 500 ஆக உயர்த்தி தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here