கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் போன்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது போதை பொருள் தான். அதாவது இந்த காலத்தில் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி பல குற்றங்களை செய்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதைப்பொருளை அடியோடு விரட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், காவல்துறை உயர் அதிகாரிகள், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழக ஐடி ஊழியர்களுக்கு குட் நியூஸ்., அரசின் இலக்கே இது தான்.., அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!
இந்த கூட்டத்தில் போதை பொருள் விற்பனை செய்பவர், உட்கொள்பவர் போன்றவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இலங்கையில் இருந்து சர்வதேச கடத்தல் தாதா கும்பல் தமிழகம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.