உலக அளவில் ஐடி துறையில் மந்த நிலை நிலவுவதால் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர். இதனால் தமிழகத்தில் ஐடி துறையில் வளர்ச்சி மற்றும் தொலைநோக்கு முறையில் நலத்திட்டங்களை முதலமைச்சரின் வழிகாட்டுதலின் படி செயல்படுத்தப்படுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
தற்போது 100 மில்லியன் டாலர் என்ற இலக்கில் செல்லும் ஐடி துறையை பெரு நகரங்களில் அதிக அளவில் முதலீடு செய்ய வைத்து 2030க்குள் 1 ட்ரில்லியன் டாலர் என்ற இலக்கை அடைய வேண்டும் என தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. இது தவிர தகவல் தொழில்நுட்ப துறையில் 10 சதவீத பங்களிப்பை ஏற்படுத்தவும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகள் இதை தான் செய்ய வேண்டும்.., போக்குவரத்துக்கு துறை எச்சரிக்கை!!
மேலும் கொரோனா காலங்களில் உலக அளவில் வீழ்ச்சி அடைந்த ஐடி துறையில் தமிழகம் 18% வளர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். உத்வேகத்துடன் செயல்பட்டு டிஜிட்டல் துறையில் மாநிலங்களில் முதன்மையானதாக தமிழகம் விளங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார்.