முன்னணி நடிகரான விக்ரம், தனது மகன் துருவ் விக்ரமை எப்படியாவது, டாப் ரேஞ்சுக்கு கொண்டு செல்ல போராடிவரும் நிலையில், அவர் மார்க்கெட்டை கெடுக்க இந்த இயக்குனர் திட்டம் போட்டுள்ளாராம்.
துருவ் விக்ரம்:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான, விக்ரமின் ஒரே மகன் நடிகர் துருவ் விக்ரம். தற்போது வரை இவர், சினிமாவில் தன் தந்தையைப் போல் ஒரு பெயர் வேண்டும் என்பதற்காக போராடி வருகிறார். இந்த நிலையில் இவர் அறிமுகப்படமான ஆதித்யவர்மா, தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தை ரீமேக் செய்து எடுக்கப்பட்டது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த ரீமேக் படத்தை, இயக்குனர் பாலாவை வைத்து விக்ரம் எடுத்து வந்தார். திடீரென படத்தின் சாயல் மாறிப்போனதாகவும், மோசமான ஆபாச காட்சிகள் இந்த படத்தில் வந்ததாகவும் கூறி இதனைப் பாதியிலேயே விக்ரம் நிறுத்தினார். அதன் பிறகு வேறு ஒரு இயக்குநரை வைத்து இந்த படத்தை எடுத்து, ஆதித்ய வர்மா என்ற பெயரில் வெளியிட்டார். இந்தப் படம் பாதியிலே நின்று போனதால் இயக்குனர் பாலாவுக்கு, மிகப்பெரிய அவப்பெயர் ஏற்பட்டது.
அதுமட்டுமில்லாமல், திரை துறையில் தன்னை இந்த அளவுக்கு வளர்த்து விட்ட பாலாவை, விக்ரம் மறந்து போனதாலும், தன்னை பாதியிலேயே அந்த படத்தில் இருந்து வெளியேற்றியதாலும் பாலா உச்ச கட்ட காண்டில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இவரின் இந்த பழிவாங்கலில் சிக்கி துருவ் தன் கெரியரை தொலைத்தது தான் மிச்சம்.பாலாவின் இந்த செயல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.