தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவிலுக்கு வந்து போன 35 பேருக்கு கொரோனா உறுதி – பக்தர்கள் அதிர்ச்சி!!

0

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மேல்மருவத்தூர் கோவிலுக்கு வந்து சென்ற 35 பக்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தொற்று உறுதி :

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் இங்கு மூன்றாம் அலை ஆரம்பித்துவிட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் அண்மையில் எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில், சென்னைக்கு அருகில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று.

இங்கு, வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். இந்த கோவிலுக்கு, அண்மையில் கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணம் பகுதியிலிருந்து வந்து, தரிசனம் முடித்து திரும்பிய 35 பக்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த கோவிலுக்கு வந்து சென்ற மற்ற பக்தர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here