மீண்டும் ஒரு வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் – 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!!

0
மீண்டும் ஒரு வழக்கில் கைதாகும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் - 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!!
மீண்டும் ஒரு வழக்கில் கைதாகும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் - 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!!

கடந்த அதிமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த ஜெயக்குமார், ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய வழக்கும் அவர் மேல் பாய்ந்துள்ளது.

மீண்டும் கைது:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது, திமுக பிரமுகர் ஒருவரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று முன்தினம் நள்ளிரவில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இவரின் மீது, 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், இவரை வருகிற மார்ச் 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகவும், தேர்தல் நாளன்று மறியலில் ஈடுபட்டதாக கூறி மேலும் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here