நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வழங்கப்பட்ட கூடுதல் தளர்வுகள் – தமிழக தேர்தல் ஆணையம் அதிரடி!!

0
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வழங்கப்பட்ட கூடுதல் தளர்வுகள் - தமிழக தேர்தல் ஆணையம் அதிரடி!!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வழங்கப்பட்ட கூடுதல் தளர்வுகள் - தமிழக தேர்தல் ஆணையம் அதிரடி!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில், சில தளர்வுகளை அளித்து மாநில தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

கூடுதல் தளர்வுகள்:

தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து, பிப்ரவரி 22ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான, இறுதி கட்ட பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. கொரோனா பரவல், காரணமாக அரசியல் கட்சிகளுக்கு பிரசாரம் சம்பந்தப்பட்ட சில கட்டுப்பாடுகளை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

தற்போது அந்த கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி தேர்தலுக்காக, காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து, அரசியல் கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்ய கூடுதலாக 4 மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது. பேரணிகள் மற்றும் சைக்கிள் ஊர்வலம் உள்ளிட்ட பரப்புரைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற்று பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here