மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான ஒரு திட்டத்தை செயல்படுத்திய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு தனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள் :
தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டு ஆக போகிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு வாய்ந்த திட்டம் ஒன்றை முதல்வர் செயல்படுத்தினார். அதாவது, சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் மாற்று திறனாளிகளும் அலைகளை அருகில் சென்று கண்டுகளிக்க ஏதுவாக, தற்காலிக நடைபாதை ஒன்றை அமைத்து தந்தார்.
மேலும் இந்த தற்காலிக பாதை தற்போது நிரந்தர பாதையாக மாற்றப்படும் என முதல்வர் அறிவித்தார். இதற்கான நடவடிக்கைகளும் விரைவில் துவக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அடுத்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த், இந்த புதுமையான அறிவிப்பை தான் வரவேற்பதாகவும், இதை கொண்டு வந்த முதல்வரை மனதார பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
எத்தனை முறை சென்றாலும் சலிக்காதது கடல் என்பார்கள். அந்தக் கடலலையில் ஒருமுறையேனும் கால் நனைக்க நினைத்திருந்த மாற்றுத்திறனாளிகளின் எண்ணம் நனவாகும் வண்ணம் தற்காலிகப் பாதையினை ஏற்படுத்தியுள்ளோம்; விரைவில் நிரந்தரம் ஆக்குவோம்.
சிறிய பணிதான் இது; பெரிய மாற்றத்துக்குத் தொடக்கமும் கூட. pic.twitter.com/E1vT5FIqTp
— M.K.Stalin (@mkstalin) December 28, 2021
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்