மத்திய அரசை கண்டித்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் வரும் மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், இந்த நாளில் ஆட்டோக்கள் ஓடாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உள்ளாடை இல்லாமல் சட்டை பட்டனை கழட்டி போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்., சுக்கு நூறாய் சிதறிய ரசிகர்கள்!
முக்கிய அறிவிப்பு :
தமிழகத்தில் மின்சார திருத்த சட்டத்தை திரும்பப் பெறுதல், பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கல், தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கைவிடுதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் வரும் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்தில், அரசு போக்குவரத்து ஊழியர்கள் கலந்து கொண்டால், ஊதிய பிடித்ததுடன் கூடிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த போராட்டத்திற்கு, திமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.
இந்த நாளில், தமிழகத்தில் பெரும்பாலான பேருந்துகள் இயங்காது என்பதால், அதற்கான மாற்று நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசு முயற்சித்து வருகிறது. இந்த நிலையில், இந்த போராட்டம் நடைபெறும் 2 நாட்களும் தமிழகத்தில் ஆட்டோக்கள் ஓடாது என ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் உள்ள, 3 லட்சத்து 20 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்குமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால், பொதுமக்கள் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்