கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதை இவர் அனுமதிக்கப்பட்டுள்ள, காவேரி மருத்துவமனை அறிக்கையால் தெரிவித்துள்ளது.
உயிர் காக்கும் கருவி
தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, 72. கடந்த 13ம் தேதி, மூச்சுத் திணறல் காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. நுரையீரலில் 90 சதவீதம் தொற்று ஏற்பட்டது தெரிய வந்தது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
இணை நோயால் பாதிக்கப்பட்டதால், உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவியின் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அமைச்சர்கள் தங்கமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் மருத்துவமனை சென்று உடல் நிலை குறித்து விசாரித்தனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில், காவேரி மருத்துவமனை சார்பில் வெளியிட்ட அறிக்கையில்,’ தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. உயிர் காக்கும் கருவிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.