தமிழக அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறை., அரசாணை வெளியீடு!!!

0
தமிழக அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறை.
தமிழக அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை, கடந்த மார்ச் 1ஆம் தேதி முதலே தொடங்கி உள்ளனர். இந்நிலையில் மாணவர் சேர்க்கை பணிகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அரசாணையாக, பள்ளிக்கல்வித்துறை செயலர் ஜெ.குமர குருபரன் வெளியிட்டுள்ளார்.

அதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி, இட ஒதுக்கீடு, ரூ.1,000 உதவித்தொகை உள்ளிட்ட அனைத்து நலத்திட்டங்களையும், பொதுமக்கள் அறியும் வண்ணம் பேனர்கள், துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்ய வேண்டும். மேலும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பொறுப்புகளை பிரித்து கொடுத்து திட்டமிட்டு செயல்பட வேண்டும். அதேபோல் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று. அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க உதவி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here