பொதுத்துறை ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு!!

0

கொரோனா காலத்தில் அரசுக்கு வரி வருவாய் ஏற்பட்டது. இதையும் தாண்டி, தற்போது தமிழக அரசு பொதுத்துறை ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளது.

2.91 லட்சம் பேர் பயன்

நாட்டில், கொரோனா தாக்கம் சற்று குறைந்து வருகிறது. தொழில் துறையும் வேகமாக செயல் படுகிறது. இந்நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்,’ நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் தொழிலாளர்களின் உழைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இலாபம் அல்லது நட்டம் அடைந்துள்ள அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ், 1.67 சதவீதம் கருணைத் தொகை என மொத்தம் 10 விழுக்காடு வரை வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 91 ஆயிரத்து 975 தொழிலாளர்களுக்கு 210 கோடியே 48 லட்சம் ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படும். இது, தீபாவளிப் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வழி வகை செய்யும் ,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here