தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான, டி. ராஜேந்தருக்கு அமெரிக்காவில் நல்லபடியாக அறுவை சிகிச்சை முடிந்ததாக அவரது மகன் சிம்பு தெரிவித்துள்ளார்.
சிம்பு தகவல்:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் இயக்குனருமான, டி. ராஜேந்திரனுக்கு அண்மையில் உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இவருக்கு வயிற்றில் இரத்த கசிவு ஏற்பட்டதாகவும், இதனால் இவரை மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்ல உள்ளதாகவும் இவரது மகன் சிம்பு தெரிவித்தார்.
இதையடுத்து, தனது தந்தைக்கு முன்பாகவே அமெரிக்கா சென்று சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்தார். தொடர்ந்து தனது மனைவியுடன் டி.ராஜேந்தர், மேல் சிகிச்சைக்காக அண்மையில் அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.
தற்போது, இவருக்கான மேல் சிகிச்சை அமெரிக்காவில் நல்லபடியாக முடிந்துள்ளதாகவும், விரைவில் நாடு திரும்ப உள்ளதாகவும் சிம்பு தெரிவித்துள்ளார். இந்தியா திரும்பியவுடன், சிம்பு பத்து தல படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள உள்ளார். சிம்புவின் இந்த அறிவிப்பால், ரசிகர்கள் மன நிம்மதி அடைந்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்