தமிழ்நாட்டில் படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மாவட்ட மு.அருணா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் முதல் பட்டயப்படிப்பு முடித்த இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த உதவித்தொகையை பெறலாம்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேல் இருக்க வேண்டும். அதேபோல் ரெனீவல் செய்ய இருப்பவர்களும் தங்களது சுய உறுதிமொழி, உதவித்தொகை எண், வங்கி கணக்கு நகல் உள்ளிட்ட ஆவணங்களை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் சென்று சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தி உள்ளனர்.
நீட் தேர்வர்களே., தமிழகத்தில் முதல் கட்ட கலந்தாய்வு ரிசல்ட் தேதி மாற்றம்!!!