தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் பணம், நகை திருடிய காலம் போய் மாணவர்களின் கல்வி சான்றிதழை திருடும் அளவுக்கு காலம் மாறி போகிவிட்டது. அந்த வகையில் சமீபத்தில் பீகார் பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்களின் சான்றிதழ்கள் திருடு போன நிலையில் பல்கலைக்கழகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது, சமீபத்தில் மாணவர்கள் சான்றிதழை கேட்டு வரும் பொழுது முன்னதாக வழங்கப்பட்டு விட்டதாக பல்கலைக்கழகத்திற்கு தெரிய வந்தது.
அப்போது தான் இந்த திருட்டு நடக்கிறது என்று தெரிய வந்தது. எனவே இது மாதிரியான திருட்டுகளை குறைக்க இனிமேல் மாணவர்கள் ஆதார் கார்டு கொண்டு வந்தால் மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும். ஆதார் கார்டு இல்லாத பட்சத்தில் மாணவர்கள் வாக்காளர் அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.