தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் திருடப்பட்டு வருவதாக புகார்கள் அவ்வப்போது வெளிவருகிறது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ரேஷனில் நுகர்வோர்கள் பெறக்கூடிய உணவுப் பொருட்களின் விவரங்கள் ரேஷன் கார்டில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணுக்கு SMS மூலம் தெரிய படுத்தப்பட்டு வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதைத்தொடர்ந்து மற்றொரு முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ரேஷன் கடைகளில் மின்னணு பாயிண்ட் ஆப் சேல் சாதனம் மூலம் நுகர்வோர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்ற ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆன்லைனில் அப்டேட் செய்த விவரங்களும் மின்னணு பாயிண்ட் ஆப் சேல் சாதனத்தில் உள்ள எடையின் விவரங்களும் சரியாக இருக்கிறதா? என சோதனை மேற்கொள்ளப்படும்.
இதன்மூலம் ரேஷனில் நுகர்வோர்கள் பெறும் உணவு பொருட்களின் அளவு குறைவாக வாய்ப்பில்லை. மேலும் திருடப்படும் பிரச்சினையும் தவிர்க்கப்படும் என மத்திய அரசு அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.