சட்டசபை குட்கா விவகாரம் – மீண்டும் நோட்டீஸை ரத்து செய்த நீதிமன்றம்!!

0

சட்டசபைக்குள் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உட்பட 19 எம்.எல்.ஏ.,கள் குட்கா கொண்டு சென்றதால் அவர்கள் மீது உரிமை மீறல் நோட்டீஸை உரிமைக்குழு இரண்டாவது முறையாக அனுப்பியது. தற்போது மீண்டும் அதை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

குட்கா விவகாரம்:

கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உட்பட 19 எம்.எல்.ஏகள் குட்காவை எடுத்து சென்றனர். இதனால் பல சர்ச்சைகள் கிளம்பியது. மேலும் ஸ்டாலின் மற்றும் 19 எம்.எல்.ஏகள் விதிகளை மீறியதாக கூறி அவர்களுக்கு உரிமைக்குழு நோட்டிஸ் அனுப்பியது. இதனை எதிர்த்து ஸ்டாலின் உட்பட 19 எம்.எல்.ஏகள் வழக்கு தொடர்ந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை விசாரித்த நீதிமன்றம் நோடீஸில் அடிப்படை பிழை இருப்பதாக கூறி அதனை ரத்து செய்தது. மேலும் பிழை இல்லாத இரண்டாவது புதிய நோட்டிஸை அனுப்பலாம் என்றும் அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து இரண்டாவது புதிய நோட்டிஸை உரிமை குழு அனுப்பியது. இதனை எதிர்த்து ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது ஸ்டாலின் தரப்பினர் கூறியதாவது, குட்கா இன்னும் விற்பனை செய்யப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டுவதற்காக தான் நாங்கள் கொண்டு சென்றோம் என்று வாதாடினர்.

சீனாவின் வூகானில் இருந்து கொரோனா பரவவில்லை – WHO அதிரடி அறிவிப்பு!!

தற்போது இன்று இதற்கான முடிவை நீதிமன்றம் அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது நீதிமன்றம் உரிமைக்குழு சார்பில் அனுப்பட்ட நோட்டிஸை மீண்டும் இரண்டாவது முறையாக சென்னை உயர் நீதியமன்றம் ரத்து செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here