தமிழகத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவடைந்துள்ள நிலையில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 26 முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற தேர்வுகளில் கலவையான விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், அறிவியல் பாடத் தேர்வு வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அறிவியல் பாட ஆசிரியர்கள் கூறுகையில், ஒவ்வொரு பாடப்பகுதியிலும் முக்கியமானதாக இருந்த கேள்வி எதுவும் வினாத்தாளில் இடம்பெறவில்லை. புதிய வடிவிலான வினாக்கள் இடம்பெற்றுள்ளதால் நன்றாக படிக்கும் மாண்வர்கள் கூட பதிலளிக்க சிரமப்பட்டனர். இதனால் அறிவியல் பாட தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.” என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
Enewz Tamil டெலிக்ராம்
திரையரங்கை கலக்க வரும் தனுஷின் ‘ராயன்’., ரிலீஸ் தேதி இதுதான்.. இணையத்தில் கசிந்த முக்கிய அப்டேட்!!