கள்ளக்குறிச்சி மாணவி உடலை முதலில் தகனம் செய்ய முடிவு செய்து இருந்த நிலையில் தற்போது மாணவி உடலை பெற்றோர் புதைக்க முடிவு செய்துள்ளனர்.
மாணவி உடல் புதைப்பு:
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்த ஸ்ரீமதி என்ற மாணவி கடந்த 13ம் தேதி மாடியில் இருந்து விழுந்து இறந்து உள்ளார். இதனை தொடர்ந்து ஜூலை 19ம் தேதி மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு இன்று அதிகாலை பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. மாணவியின் உடலை தகனம் செய்ய நேற்று முதல் நெசலூர் கிராமத்தில் முன்கூட்டியே ஏற்பாடுகள் நடந்தன.
ஆனால் பெற்றோர்கள் திடிரென்று அந்த முடிவை கைவிட்டு ஸ்ரீமதி உடலை புதைக்க முடிவெடுத்துள்ளனர். மேலும் புதைப்பதற்காக ஜெசிபி மூலம் அங்கு குழி தோண்டப்பட்டது. இதுகுறித்து ஸ்ரீமதியின் உறவினர்களிடம் கேட்டபோது மத முறைப்படி தகனம் செய்ய வேண்டும். ஆனால் மறுப்பிரேத பரிசோதனை ரிப்போர்ட் இன்னும் வரவில்லை. ஒருவேளை ரிப்போர்ட் மீது எங்களுக்கு சந்தேகம் இருந்தால் உடலை மீண்டும் பரிசோதனை செய்ய நீதிமன்றத்தில் கோரிக்கை வைப்போம். இதற்காக உடலை புதைக்க முடிவு செய்தோம் என மாணவியின் உறவினர்கள் கூறியுள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்