தற்போது வரும் 18ம் தேதி அன்று சென்னையில் வைத்து இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலம் நடைபெறவுள்ளது. அதில் பங்குகொள்ள ஸ்ரீசாந்த் தனது பெயரை பதிவு செய்தார். அனால் இறுதி பெயர் பட்டியலில் ஸ்ரீசாந்தின் பெயர் இடம்பெறவில்லை.
ஸ்ரீசாந்த்:
கடந்த 2013ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் மேட்ச் பிக்சிங் செய்த காரணத்தினால் ஸ்ரீசாந்த் உட்பட பல வீரர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்களுக்கு போட்டியில் பங்குபெறவும் தடை விதித்தனர். இவர்களின் தடை காலம் கடந்த ஆண்டுடன் முடிவுக்கு வந்தது. அதன்பின்பு ஸ்ரீசாந்த் நடந்து முடிந்த சையது முஷ்டாக் அலி கோப்பையில் பங்கேற்று விளையாடினார். ஆனால் அந்த தொடரில் அவரது விளையாட்டு பேசும் அளவிற்கு இல்லை.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மொத்தமாகவே அவர் 4 விக்கெட்டை தான் வீழ்த்தியுள்ளார். மேலும் ஓவருக்கு 9 ரன்களுக்கு மேல் கொடுத்துள்ளார். இதனால் இவரது பார்ம் மிகவும் மோசமாக இருக்கிறது என்று அனைவருக்கும் தெரிகிறது. மேலும் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் பங்கு பெறவேண்டும் என்று எண்ணிய ஸ்ரீசாந்த் ஏலத்திற்காக தனது பெயரை பதிவு செய்தார். மொத்தமாக 1,097 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்தனர். ஆனால் இறுதிப்பட்டியலில் தேர்வானவர்கள் வெறும் 292 வீரர்கள் தான்.
சாத்தூர் பட்டாசு ஆலை தீ விபத்து – 11 பேர் பரிதாப பலி!!
இதில் முதல்கட்ட பட்டியலில் பெயர் கொடுக்காத 17 வீரர்கள் அணிகளின் விருப்பத்திற்கேற்ப இறுதிப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இறுதி பட்டியலில் இந்தியா அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்தின் பெயர் இடம்பெறவில்லை. இதன்மூலம் ஐபிஎல் அணிகள் அனைத்தும் ஸ்ரீசாந்தை எடுப்பதற்கு விருப்பம் காட்டவில்லை என்பது தெரிகிறது. ஐபிஎல் மினி ஏலம் வரும் 18ம் தேதி மாலை 3 மணிக்கு துவங்குகிறது.