சன் டிவியில் பேமஸான நாதஸ்வரம் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஸ்ருதி. இதனை தொடர்ந்து வாணி ராணி, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட பல சீரியலில் நடித்த ஸ்ருதி கடந்த வருடம் ஜனவரி மாதம் பாடிபில்டரும் உடல் பயிற்சியாளருமான அரவிந்த் சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தனது ஆசை கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் நேற்று அரவிந்த் சேகர் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கு சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் நடிகை ஸ்ருதி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் எனது கணவர் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இந்த இக்கட்டான சூழ்நிலையில் நான் ஏன் இந்த வீடியோவை எடுக்கிறேன் என்றால் அதற்கு காரணம் சோசியல் மீடியா தான். சில யூடியூப் சேனல்கள் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். இதனால் எங்களது குடும்பம் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். அரவிந்த் இதனால் தான் இறந்தார் என்று சொல்லி பல வதந்திகளை கிளப்ப வேண்டாம் என்று கேட்டு கொண்டார்.
மருத்துவ செலவுக்கு பிரபல நடிகரிடம் கடன் வாங்கிய சமந்தா.., அடக்கடவுளே.., உங்களுக்கா இந்த நிலைமை!!
View this post on Instagram