நெஞ்சம் மறப்பதில்லை என்னும் சீரியல் மூலமாக மக்களின் மத்தியில் பிரபலமான சரண்யா தற்போது தனது காதலனுடன் நெருக்கமாக இருக்கும் படியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
சரண்யா துராடி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நெஞ்சம் மறப்பதில்லை என்னும் சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் நடிகை சரண்யா. அந்த சீரியலை தொடர்ந்து தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஆயுத எழுத்து மற்றும் வைதேகி காத்திருந்தாள் ஆகிய சீரியல்களில் கதாநாயகியாக நடித்தார். பல சீரியல்களில் நடித்து கொண்டிருந்தாலும் சமூக வலை பக்கங்களில் அதிகமாக நேரத்தை செலவிட்டு வருகிறார்.
தற்போது தனது காதலனை கட்டிபிடித்தபடி சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.மேலும் ”வாழ்க்கைல போராடி கிடைக்குற விஷயத்துக்கு எப்பவும் மதிப்பு அதிகம்னு சொல்லுவாங்க. நம்மளோட எல்லா போராட்டத்துக்கும் பிடிவாதத்துக்கும் இந்த வருஷம் பலன் கிடைக்கனும். சூழ்நிலையும் காலமும் நம்மை இன்னும் எவ்வளோ சோதிச்சாலும் இந்த அன்பு எப்பவும் நம்ம கூடவே இருக்கனும் அவ்ளோதான்” என அந்த புகைப்படத்திற்கு தலைப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்