விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக களமிறங்கிய அக்ஷரா தனது அம்மாவுடன் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
வைரல் போட்டோ:
விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி முடிந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் சீசன் 5. இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக ராஜு அறிவிக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியில், மதுமிதா என்ற போட்டியாளருடன் சேர்ந்து பிக் பாஸ் வீட்டுக்குள் அக்ஷரா அடியெடுத்து வைத்தார். கிட்டத்தட்ட 80 நாட்களுக்கும் மேலாக நீடித்த இவர், அனைத்து டாஸ்குகளிலும் சிறப்பாக விளையாடினார். பாவ்னிக்கும் இவருக்கும் இடையே அடிக்கடி, பனிப்போர் நிலவி வந்தது.
இந்த நிலையில், இவர் தன்னுடைய சக போட்டியாளர் வருணுடன் சேர்ந்து, ஒரே நாளில் வீட்டை விட்டு வெளியேறினார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, தனது சக போட்டியாளர்கள் யாருடனும் நான் தொடர்பு வைத்துக்கொள்ள மாட்டேன் என பேசி சர்ச்சையில் சிக்கினார். தற்போது அக்ஷரா தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அம்மாவை உரிச்சு வச்சு இருக்கீங்களே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்