மூத்த குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கு உத்தரவாதமான வருமானம் வழங்கும் வகையில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தை (SCSS).மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில் ரூ.1000 முதல் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். ஐந்து ஆண்டுகள் முதிர்வு கொண்ட இத்திட்டத்தில், 8.2 சதவீத ஆண்டு வட்டி வழங்கப்பட்டு வருகிறது.
TNUSRB தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களா? இந்த புக் மெட்டீரியல் இருக்கா? மிஸ் பண்ணிடாதீங்க!!!
அதன்படி ரூ.30 லட்சம் முதலீடு செய்தால், ஆண்டு வட்டியாக ரூ.2.46 லட்சம் கிடைக்கும். இத்திட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 55 முதல் 60 வயதுக்குட்பட்ட அரசு ஓய்வூதியதாரர்கள் முதலீடு செய்யலாம். ஆர்வமுள்ளவர்கள் அருகாமையில் உள்ள போஸ்ட் ஆபீஸ் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் தகுந்த ஆவணங்களை கொண்டு கணக்கை தொடங்கலாம்.