தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் வருகையை அதிகரிக்கவும், உடல் ஆரோக்கியத்திற்காகவும் காலை உணவு திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார். இத்திட்டத்திற்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலும் இருந்து வரவேற்பு குவிந்து வருகிறது. அந்த வகையில் தற்போது இலங்கையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு, ஆரோக்கியமான சுறுசுறுப்பான தலைமுறை என்ற திட்டத்தின் கீழ் காலை உணவுத் திட்டத்தை, அதிபர் ரணில் விக்ரமசிங்க தொடங்கி வைத்துள்ளார்.
நான் விவாகரத்து செய்ய இது தான் காரணம்.., ஓப்பனாக பேசிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிப்பிரியா!!
காலை 07.30 மணி முதல் 08.30 மணி வரை வழங்கப்படும் காலை உணவு மூலம் நாடு முழுவதும் 16 லட்சம் மாணவ மாணவியர்கள் பயனடைய இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இத்திட்டம் அந்நாட்டு மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.