புயல் எச்சரிக்கை: பள்ளி மாணவர்களுக்கு திங்கள்கிழமை விடுமுறை…, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட புதுச்சேரி!!

0
புயல் எச்சரிக்கை: பள்ளி மாணவர்களுக்கு திங்கள்கிழமை விடுமுறை..., அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட புதுச்சேரி!!
தமிழகம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வடகிழக்குப் பருவ மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோர பகுதிகளில் புயலாக மாறக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகம் ஆகிய பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
இதனால், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒவ்வொரு மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் டிசம்பர் 4 (திங்கள் கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளதாக புதுச்சேரி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here