தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகளில் முறைகேடு நடப்பதை தடுக்க, மாநில பள்ளிக்கல்வித்துறை பல நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள அரசு சுபாஷ் எக்ஸலன்ஸ் மேல்நிலைப் பள்ளியில், நேற்று (ஜன.29) நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராவ் உதய் பிரதாப் சிங் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதாவது “பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசிவதை தடுக்கும் முறையை விரைவில் கடுமையாக்க போகிறோம். இதன்மூலம் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்கள், கசிவு இல்லாமல் சென்றடைவது உறுதி செய்யப்படும்.” என கூறியுள்ளார். அதேபோல் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டால், அவர்களை கிரிமினல் சட்ட வரம்புக்குள் கொண்டு வரக்கூடிய நடவடிக்கையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
இனி இவர்களுக்கு பழனி கோவிலில் அனுமதி கிடையாது.., உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!!!