தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவ்வப்போது மாவட்டங்களில் நடைபெறும் பண்டிகை, தலைவர்கள் தினம் போன்ற முக்கிய நாட்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அந்த வகையில் உத்திரபிரதேசத்தில் சிவபக்தர்கள் கங்கை நதிக் கரைக்கு பாத யாத்திரையாக சென்று தங்கள் வீடுகளிலோ அல்லது ஊர்களிலோ உள்ள கோவில்களுக்கு ஆண்டுதோறும் வழங்கி வருகிறார்கள். தற்போது இந்த புனித “கன்வார் யாத்திரை” நடைபெற இருப்பதால் உத்திரபிரதேச மாவட்டங்களில் பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
TNPSC Group 7-B & 8 Exam Pattern | Online Live Course | Test Series | Mock Test!!
அதன்படி உத்திரபிரதேச முசாபர் நகர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (ஜூலை 8) முதல் ஜூலை 16ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அதிகாரி அறிவித்துள்ளனர். இதன் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலரும் நல்ல வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.